நாசரேத் பள்ளி ஆண்டுவிழா

நாசரேத், மார்ச் 2: நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 23வது ஆண்டு விழா நடந்தது. பிரகாசபுரம் சேகர குரு ஜெபவீரன் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி நிர்வாகி பியுலாசாலமோன் வேதபாடம் வாசித்தார். பள்ளிதாளாளர் ஜமீன் சாலமோன் வரவேற்றார். மாணவி ஜெய்ஷ்ணவி உறுதி மொழி எடுத்தார். பள்ளிமுதல்வர் அனி ஜெரால்டு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அனைத்து இந்திய தனியார் பள்ளி பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் ஜெயக்குமார், தியாகராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிளாரன்ஸ் தியாகராசன் பரிசுகளை வழங்கினார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தலைவர் சத்தியவதிமனோகரன், உதவி முதல்வர் மகிலா சரவணன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி மிரியம் நன்றி கூறினார்.

Related Stories: