ஊத்துக்கோட்டை, பிப். 21: ஊத்துக்கோட்டையில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பெரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணி வரவேற்றார். டாக்டர்கள் தீபா, ரூபஸ்ரீ, தலைமையாசிரியர்கள் மகேஸ்வரன், துரைசாமி, நீலகண்டன், பாஸ்கர், மேலாளர் சுதர்சனம், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், டிஎஸ்பி சந்திரதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.