தஞ்சை, பிப்.12: தஞ்சையில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை ரயிலடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபால் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல், வங்கி, ரயில்வே, ஏர் இந்தியா, நிலக்கரி, மின்சாரம், போக்குவரத்து, கல்வி ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.