பொள்ளாச்சி, பிப். 6: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், புடலை, பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவை அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், டி.நல்லிகவுண்டன்பாளையம், முத்தூர், சூலக்கல், வடக்கிபாளையம், பொன்னாபுரம், கோட்டூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பந்தல் காய்கறிகளில் விவசாயிகள் அதிகம் ஈடுபடுகின்றனர். இதில் மழை காலம் மட்டுமின்றி வெயிலின் தாக்கம் இருக்கும் போதும் புடலங்காய் விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி ஆகஸ்ட் மாதத்தில் விவசாயிகள் பலர் பந்தல் காய்கறியில் ஈடுபட்டனர். அவை நவம்பர் மாதத்தில் நல்ல விளைச்சலடைந்த நிலையில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு அதிகளவு கொண்டுவருவது தொடர்ந்தது.