வெயில், பனியால் புடலங்காய் விளைச்சல் பாதிப்பு

பொள்ளாச்சி, பிப். 6:  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில்,  புடலை, பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவை அதிகளவு  பயிரிடப்பட்டுள்ளது. நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், டி.நல்லிகவுண்டன்பாளையம், முத்தூர், சூலக்கல், வடக்கிபாளையம், பொன்னாபுரம், கோட்டூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பந்தல் காய்கறிகளில் விவசாயிகள் அதிகம் ஈடுபடுகின்றனர். இதில் மழை காலம் மட்டுமின்றி வெயிலின் தாக்கம் இருக்கும் போதும் புடலங்காய் விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி ஆகஸ்ட் மாதத்தில் விவசாயிகள் பலர் பந்தல் காய்கறியில் ஈடுபட்டனர். அவை நவம்பர் மாதத்தில் நல்ல விளைச்சலடைந்த நிலையில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு அதிகளவு கொண்டுவருவது தொடர்ந்தது.

இரண்டு மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட புடலங்காயானது, வளர்ச்சியடைய துவங்கியுள்ளது. தற்போது  மழை இல்லாமல் இருந்தாலும் விவசாயிகள் பலர் சொட்டுநீர் பாசனம் கொண்டு விளைச்சலை அதிகரிக்க துவங்கினர். ஆனால், கடந்த சில வாரமாக பகல் நேரத்தில் வெயிலும், அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும் இருப்பதால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு பந்தல் காய்கறிகள் வாடி வதங்குகிறது. இதில் முத்தூர், தாளக்கரை, சூலக்கல் உள்ளிட்ட பல இடங்களில் விளைச்சலுக்கு தயாரான புடலங்காயானது வாடி வதங்கியபடி உள்ளது. இதனால் அந்த காய்களை அறுவடை செய்யாமல் விட்டு சென்றுள்ளதால், அவை தானாகவே பழுத்து கீழே விழுவதால் நஷ்டம் உண்டாவதாக  விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.