தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு சிறப்பு பேருந்துகள்

பொள்ளாச்சி,பிப்.4: பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு, தைப்பூச திருவிழாவையொட்டி 7ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.   வரும் 8ம் தேதி பழனியில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவையொட்டி, அங்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து 7ம்  முதல் 9ம் தேதி வரை என தொடர்ந்து மூன்று நாட்களும், பழனிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக  கூடுதலாக 25 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.   அதுபோல் 8ம் தேதி மாலையிலிருந்து தைமாத பவுர்ணமி துவக்கம் என்பதால்,  திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் சென்று வர வசதியாக,  7ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை அடுத்தடுத்து 6 சிறப்பு பஸ்கள், மத்திய பஸ் நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில், திருவண்ணாமலைக்கு  இயக்கப்பட உள்ளதாக கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.