சிவகங்கை, ஜன. 22: சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் அண்ணாமலை (19). இவர் மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை சிவகங்கையில் இருந்து சாத்தரசன்கோட்டைக்கு டூவீலரில் செல்லும் போது எதிரே மற்றொரு டூவீலரில் வந்த நாடாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திருமால்கண்ணன் (30)என்பவரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அண்ணாமலை மற்றும் திருமால் கண்ணன் இருவரும் இறந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பகலில் இருவரது உடலுக்கும் பிரேத பரிசோதனை நடந்தது. அண்ணாமலையின் நண்பர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்தனர்.