தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்

தேவகோட்டை, ஏப். 21: தேவகோட்டையில் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நேற்று முன்தினம் இரவு, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ. தவமணி தலைமயிலான போலீசார், சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தேவகோட்டையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் தளக்காவயல் புதுக்குடியிருப்பு பகுதியில் விரிசுழி ஆற்றையொட்டிய பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்த 1500 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: