நீர் மோர் பந்தல் திறப்பு

 

சிவகங்கை, ஏப். 26: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிவகங்கை அதிமுக நகர் கழகம் சார்பில் அரண்மனை வாசல் முன்பு நீர்மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர், சர்பத் பொதுமக்களுக்கு வழங்கினா். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜா, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சேவியர்தாஸ், ஒன்றியச் செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: