கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திருப்புத்தூர், ஏப். 28: திருப்புத்தூர் அருகே கல்வெட்டுமேடு பகுதியில் திருப்புத்தூர் நகர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகங்கைச் சாலையில் இருந்து திருப்புத்தூர் நோக்கி டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது டூவீலரை சோதனையிட்டபோது, அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து டூவீலரில் வந்த காரைக்குடி சேர்வார் ஊரணியைச் சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (22) என்பவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சமூக ஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், நாளுக்கு நாள் வாகனம் அதிகரித்து வரும் நிலையில் செக்காலைசாலை வழியாக பஸ் உள்பட கனரக வாகனங்கள் இயக்குவதை தடை செய்ய வேண்டும். நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிதாக சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்றார்.

The post கஞ்சா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: