உலக புவி தினம் அனுசரிப்பு

 

காரைக்குடி, ஏப். 26: உலக புவி தினத்தை முன்னிட்டு, காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி தாளாளர் சேதுகுமணன், கல்லூரி முதல்வர் கருணாநிதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்தது. கல்லூரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, மண் வளம் காப்போம், மழை நீரை சேகரித்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் துவங்கி புதிய பஸ் ஸ்டாண்டு வரை சாலை ஓரங்களில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றினர். கல்லூரி பேராசிரியர்கள் ரகு, செல்வி, சங்கீதா, சரத்குமார் மற்றும் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக புவி தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: