விதிமீறி வைக்கப்படும் பேனர்கள்

காரைக்குடி, ஏப். 28: காரைக்குடி நகராட்சி பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க 15 நாட்களுக்கு முன்பே கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் நிலத்தின் உரிமை உள்ள துறை மற்றும் போலீசாரிடம் தடையின்மைச் சான்று இணைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நகர்பகுதி முழுவதும் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமித்துள்ளன. அதுபோல நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிடப் பணி மேற் கொள்ளுபவர்கள் கட்டுமான பொருட்களை சாலையில் இடையூறாக கொட்டி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post விதிமீறி வைக்கப்படும் பேனர்கள் appeared first on Dinakaran.

Related Stories: