உக்கடத்தில் மின் கம்பங்கள் அகற்றாததால் மேம்பாலம் இணைப்பு பணி பாதிப்பு

கோவை, டிச.16:  கோவை உக்கடத்தில் உயர்ேகாபுர மின் கம்பங்களை அகற்றப்படாததால் மேம்பால இணைப்பு பணி பாதிப்புக்கப்பட்டுள்ளது. உக்கடத்தில் 215 கோடி ரூபாய் செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.9 கி.மீ தூர மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக கோவை சுங்கம் பைபாஸ் ரோடு, செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரங்கள் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்களை அகற்ற கடந்த 2017ம் ஆண்டில் இருந்து டெண்டர் விடப்பட்டு வருகிறது. இதுவரை டெண்டர் இறுதி ெசய்யப்படவில்லை. தற்போது 7வது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே உக்கடம் ரவுண்டானா, சுங்கம், செல்வபுரம் ரோடு சந்திப்பு பகுதியிலும், ராமர் கோயில் வீதி சந்திப்பு பகுதியிலும் மேம்பால தூண்களை இணைக்க முடியும்.

தற்போது 700 மீட்டர் தூரத்திற்கு தூண்கள் அமைக்கப்பட்டு கர்டர்கள் இணைக்கப்பட்டுள்ளது. உக்கடம் லாரி பேட்டை, ரவுண்டானா பகுதியில் மேம்பால கர்டர்கள் இணைக்கப்படவில்லை. இங்கே மின் கம்பங்களின் உயர் அழுத்த கம்பிகளை அகற்றவேண்டியுள்ளது.  ‘‘மின் கோபுர கம்பங்களை அகற்ற, நிலத்தடியில் கேபிள் பதிக்க 8.60 கோடி ரூபாய் ஆன்லைன் டெண்டர் வெளியிடப்பட்டது. ஒப்பந்த நிறுவனத்தினர் 27 சதவீத கூடுதல் தொகை கேட்டனர். 3 முதல் 5 சதவீத தொகை கூடுதலாக வழங்க மட்டுமே நெடுஞ்சாலைத்துறைக்கு அதிகாரம் உள்ளது. 27 சதவீத தொகையை வழங்காததால் ஒப்பந்த நிறுவனத்தினர் பணியை ஏற்க முன் வரவில்லை. ஒவ்வொரு முறையும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் 30 சதவீத தொகையை ஒப்பந்த நிறுவனங்கள் கூடுதலாக கேட்கிறது. மின் பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக ஒப்பந்தம் இறுதி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது,’’ என மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.