கந்தர்வகோட்டை எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்வைப்பு 12 வீடுகள் சேதம்

பொன்னமராவதி பகுதியில் தொடர் மழைபெய்தது. இந்த மழையில் பொன்னமராவதி பகுதியில் நேற்று வரை 12வீடுகள் சேதமடைந்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி எம்.உசிலம்பட்டி சிந்தாமணி என்பவரது ஓட்டு வீடும், கடந்த 1ம்தேதி வார்பட்டு அமுதா, நாகம்மாள் ஆகியோரது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகள், வார்பட்டு பாரதிநகர் சின்னம்மாள் என்பவரது கூரைவீடு, பிச்சங்காளன்பட்டி மீனாட்சி, கொன்னையம்பட்டி கண்ணு, கொன்னையம்பட்டி பாறைக்களம் கொளுஞ்சி, சூரப்பட்டி அழகம்மாள், சாத்தனூர் பிச்சைராஜ், உமா, கொள்ளுப்பட்டி மல்லிகா ஆகியோரது ஓட்டுவீடு மற்றும் திருக்களம்பூர் சரசு என்பவரது கூரை வீடு என 12வீடுகள் மழையினால் இடிந்து சேதமடைந்துள்ளது. இதே போல கறம்பக்குடி அடுத்த வெட்டன்விடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி தவமணி என்பவரது ஓட்டுவீடும் இடிந்து சேதமானது.

Related Stories: