வில்லிகுடியிருப்பு அந்திரேயா ஆலய 90வது பிரதிஷ்டை விழா

உடன்குடி, நவ. 26: உடன்குடி வில்லிகுடியிருப்பு தூய அந்திரோயா ஆலய 90வது பிரதிஷ்டை விழா, நாளை (26ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை மற்றும் 28ம் தேதியில் இரவு 7 மணிக்கு உயிர்மீட்சி கூட்டம், 29ம் தேதி காலை 9 மணிக்கு திருவிருந்து ஆராதனை, காலை 10 மணிக்கு பெண்கள் பண்டிகை, இரவு 7 மணிக்கு பண்டிகை ஆயத்த ஆராதனை நடக்கிறது. 30ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை, காலை 11 மணிக்கு வேதாகம தேர்வு, காலை 5 மணிக்கு ஐக்கிய விருந்து, டிச.1ம் தேதி காலை 9 மணிக்கு வாலிபர் பண்டிகை மற்றும் ஆராதனை, மாலை 6 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் சபை ஊழியர் ஜான்சன் சுந்தர்ராஜ், சேகர குருக்கள் செல்வன்மகாராஜா, ஆஷா தேவதாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் அமிர்தராஜ், பொருளாளர் ஜோதிலிங்கம், நிர்வாகிகள் தரன், யோவான் மற்றும் சபைமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: