திருச்செந்தூர், நவ.13: திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.4.25 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் கோயில் முன்னாள் அறங்காவலர் தங்கத்துரை, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, முன்னாள் கவுன்சிலர் ராஜமோகன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன், துணை அமைப்பாளர் ராவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.