காஞ்சிபுரம், நவ.8: காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் உள்ள குளங்களை சீரமைக்க கோரி, காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி அங்காளபரமேஸ்வரி, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் மாணவி கூறியிருப்பதாவது.
காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் பழங்காலத்தில் குடிநீருக்காகவும், இதர பயன்பாட்டுக்காகவும் சின்ன வேப்பங்குளம் மற்றும் பெரிய வேப்பங்குளம் ஆகிய 2 குளங்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்த குளங்கள் தற்போது கோரை புற்கள், புதர் மண்டி சீரழிந்துள்ளது.