சாத்தான்குளம், நவ. 7: சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை கிராமம் திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இவ்வழியாக நங்கைமொழி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகள் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் ஏராளமான சென்று வருகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் சென்று வருகின்றன. தொடர்ந்து பெய்த மழையால் பன்னம்பாறையில் பேருந்து நிறுத்தப்பகுதியில் இருந்து வீரவநல்லூர் கிராம விலக்கு வரை சாலையில் அதிகமான பள்ளங்கள் விழுந்து காணப்படுகிறது. இப்பகுதிக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தொலை தூர பகுதி மக்கள் அதிகமாக வந்து செல்வதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. சிறிது மழை பெய்தாலும் சாலையில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.