ஈரோடு, அக்.24:ரயில்வே துறை தனியார் மயமாவதை கண்டித்து உத்தரவு நகலை எரித்து எஸ்ஆர்எம்யு ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ஈரோடு ரயில் நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே மருத்துவமனை முன்பு சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்ஆர்எம்யு ஈரோடு தலைமை கிளை செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில், 50 ரயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க கடந்த 10ம் தேதி வெளியிட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தனியாரிடம் ரயில்வேயை ஒப்படைக்கும் நோக்கில் 60 வயதுக்கு முன்பே கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.