ஈரோடு,ஏப்.29: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நான்கு நுழைவு வாயில் உள்ளன.இதில் நாச்சியப்பா வீதி பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக திருப்பூர்,கோவை,தாராபுரம்,பழனி,மதுரை,வெள்ளக்கோவில் மற்றும் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வந்தன.
இந்நிலையில் நேற்று மாலையில் நாச்சியப்பா வீதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.இதற்காக பஸ் ஸ்டாண்டில் இருந்து நாச்சியப்பா வீதி வழியாக பஸ்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.இதனால் மேட்டூர் சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாக பஸ்கள் வெளியே சென்றன.
The post ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்குள் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.