மது விற்ற 4 பேர் கைது

ஈரோடு, ஏப். 28: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்தோடு கரைஎல்லப்பாளையத்தில் நேற்றுமுன்தினம் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த செல்லதுரை (36), வாய்க்கால் கரை பகுதியில் மதுவிற்ற சித்தோடு, சூரியம்பாளையம், செங்குந்தபுரம் கிழக்கு வீதியை சேர்ந்த கிருஷ்ணன் (35) ஆகிய இருவரையும் சித்தோடு போலீசார் கைது செய்தனர். இதேபோல அம்மாபேட்டை போலீசார் நடத்திய சோதனையில் சிங்கம்பேட்டையை சேர்ந்த மாதப்பன் (72) என்பவரை கைது செய்தனர்.

கோபி போலீசார் நடத்திய சோதனையில் கோபி முருகன்புதூரை சேர்ந்த ராஜேந்திரன் (66) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மது விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: