போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து

சென்னிமலை, ஏப். 27: சென்னிமலையில் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சென்னிமலை பேரூராட்சியில் 9வது வார்டுக்கு உட்பட்ட போலீஸ் குடியிருப்பு பின்புறம் ஏராளமான செடி, கொடிகள் படர்ந்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில், கோடை வெயில் காரணமாக செடி, கொடிகள் காய்ந்து போனது. நேற்று திடீரென காய்ந்த செடி, கொடிகளில் தீ பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து 9வது வார்டு கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.‌ இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பீடி, சிகரெட் பற்ற வைத்தவர்கள் யாராவது தீயை அணைக்காமல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் கூறினர்.

The post போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: