இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

உடன்குடி, அக். 24  இந்து  மக்கள்  கட்சி சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடன்குடி இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் செல்லத்துரைபாண்டியன், மாநில செயலாளர் வசந்தகுமார், பூஜாரிகள் பேரவை மாநில துணைச்செயலாளர் சாஸ்தா, மாவட்டச் செயலாளர் முத்துகுமார்  முன்னிலை வகித்தனர். இதில் டிச.1ம் தேதி சென்னையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சியின் ஆன்மிக அரசியல் மாநாட்டுக்கு 50 வாகனங்களில் திரளானோருடன் பங்கேற்பது. உடன்குடியில் பேரூராட்சி முறைகேடுகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் அசோக் மீது தாக்குதல் நடத்திய பணியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை பாராமுகமாக இருந்துவரும் பேரூராட்சி இயக்குநர், உதவி இயக்குநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி ஒன்றியத் தலைவர் தினகரன், இளைஞர் அணி ஒன்றியத் தலைவர் சதீஷ்குமார், நகரச் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் சக்திவேல், மாரிமுத்து, மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: