கந்தர்வகோட்டை, ஜூலை 19: கந்தர்வகோட்டை தாலுகா வௌ்ளாளவிடுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறக்க வலியுறுத்தி இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கந்தர்வகோட்டை தாலுகா வௌ்ளாளவிடுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறக்க வலியுறுத்தி இன்று (19ம்தேதி) அப்பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தாலுகா அலுவலகத்திலிருந்து போராட்டக்காரர்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு நேற்று அழைத்திருந்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் ஏற்கனவே சமாதான பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டபடி பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் பேச்சுவார்த்தையை புறங்கணித்து யாரும் செல்லவில்லை.