நெல்லை, ஜூன் 11: வண்ணார் சமுதாய அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து சூரியகுலத்தோர் என சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி நெல்லையில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாவூதன் தலைமை வகித்தார். நலச்சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன், அமைப்பாளர் பேச்சிமுத்து, ஆலோசகர் இசக்கிமுத்து, பொருளாளர் பிரமநாயகம், இளைஞரணி தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மணிபாபா, சட்ட ஆலோசகர் கதிர்வேல், மாநில பொருளாளர் செல்வராஜ் ஆகிேயார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.