புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை அருகே தீவிர பிரசாரம் மேற்கொண்ட ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ், தொகுதிக்கு உட்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் செய்துதருவேன் என வாக்குறுதி அளித்தார். ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ், தெற்கு சிலுக்கன்பட்டி, மறவன்மடம், கோரம்பள்ளம், அய்யனார்காலனி, வடக்கு சிலுக்கன்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வாக்குசேகரிக்க வந்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், ‘‘தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க பாடுபடுவேன். சாலை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் செய்துதருவேன். கடந்த முறை 4 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.