கோவில்பட்டி, மார்ச் 26: கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 35வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகவேல் தலைமை வகித்தார். வேதியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் அம்புஜராஜன் வரவேற்றார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர் இன்பராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். கோவை எல்.ஜி.எக்யூப்மெண்ட்ஸ் நிறுவன முதுநிலை மேலாளர் வீரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பல்வேறு ஆலோசனைகள், தொழிற்சாலைகளில் இன்றைய எதிர்பார்ப்புகள், மாணவர்களின் எதிர்கால மேம்பாடு பற்றி பேசினார். கல்லூரியில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட