காஷ்மீரில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்துக்கு நிதியுதவி

விளாத்திகுளம், மார்ச் 8:  காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு விளாத்திகுளம் வருவாய்த்துறை மற்றும் வக்கீல்கள் சங்கம் சார்பில் ரூ.37 ஆயிரத்து 500 நிதியுதவி வழங்கப்பட்டது. விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மும்மூர்த்தி மற்றும் விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் காசோலையை வழங்கினர். இதையடுத்து சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் விளாத்திகுளம் வக்கீல்கள் அழகர்சாமி, பாபுசெல்வக்குமார், மாரிமுத்து, தபசி, பூவேஷ் மற்றும் விளாத்திகுளம் துணை வட்டாட்சியர் ரத்தினகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: