தஞ்சை, மார்ச் 8: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 2018- 19ம் கல்வியாண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு 1.7.2017 முதல் 30.6.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் விளையாட்டு துறையில் வெற்றிப்பெற்று தகுதியும், திறனுடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.