தூத்துக்குடி, பிப். 27: தூத்துக்குடியில் கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி தெற்கு புதுதெருவை சேர்ந்தவர் அஜீத்குமார்(21). இவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கடை நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவரது கடையிலிருந்த லேப்டாப் டிஸ்பிளே, டிவிடி ரைட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. இதேபோல் ஜார்ஜ்ரோடை சேர்ந்த ஆண்ட்ரூஸ் டிக்சன்(23) என்பவரது கடையிலும் செல்போன் திருடுபோனது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் ஆகும்.