கிருஷ்ணகிரி, நவ.21: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கனகதாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் இளம்பூரணம், வசந்திஇளம்பூரணம் ஆகியோர் தலைமைவ வகித்தனர். நிகழ்ச்சியின் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் பொன்மொழிகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர். விழாவினையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மாறுவேடப் போட்டி, பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.