பறிமுதலான வாகனங்கள் ₹25 லட்சத்திற்கு ஏலம்

ஓசூர், ஜூன் 9: ஓசூரில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போலீசார் ₹25 லட்சத்திற்கு ஏலம் விட்டனர். ஓசூரில் கலால் போலீஸ் மற்றும் உள்ளூர் போலீசார் பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்தி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசாரின் பாதுகாப்பில் இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட 150 வாகனங்களை, போலீசார் நேற்று ஏலம் விட்டனர். கலால் டிஎஸ்பி சிவலிங்கம் மற்றும் போலீசாரின் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் ஆட்டோ 1, லாரி 1, இருசக்கர வாகனம் 28, கார் 15 என 45 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 25 லட்சமாகும். இந்த வாகனங்களை, பலர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

The post பறிமுதலான வாகனங்கள் ₹25 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: