தளி அருகே மூதாட்டி மாயம்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 9: தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அருகே பின்னமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் முருகன்(50), விவசாயி. இவரது தாயார் பாப்பம்மா (75). கடந்த 3ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பாப்பம்மா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதால், இது குறித்து முருகன், தளி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post தளி அருகே மூதாட்டி மாயம் appeared first on Dinakaran.

Related Stories: