மரக்கன்றுகள் நடும் விழா

ஊத்தங்கரை, ஜூன் 7: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சார்பு நீதிபதி அஷ்பக் அகமது, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அமர்ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்து, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊத்தங்கரை வழக்கறிஞர் சங்க தலைவர் மூர்த்தி, மூத்த வழக்கறிஞர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: