அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 8: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நேரலக்கோட்டை பாலம்மா கோயில் அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில், வன காவலர் வெங்கடாஜலம் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் அழுகிய நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அவர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்து சடலமாக மீட்கப்பட்டவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என பல்வேறு ேகாணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: