ஏரல், அக். 16: தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். பொறுப்பாளராக ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 12.07.18 அன்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் அளித்திருந்தார். 13.10.18 அன்று அவரது ராஜினமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக திருநாவுக்கரசர் அறிவித்தார்.