தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சேக்முகம்மது. லாரி மெக்கானிக். இவரது மனைவி முகம்மதுபாத்திமா (30). இவர்களுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து முகம்மதுபாத்திமா ஜீவனாம்சம் கேட்டு நெல்லை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முகம்மதுபாத்திமாவுக்கு ரூ.7 ஆயிரமும், குழந்தைக்கு ரூ.2.500ம் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டார்.ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி ஜீவனாம்சம் தொகையை சேக்முகம்மது வழங்கவில்லை. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில் சேக்முகம்மதுவை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தென்பாகம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் வக்கீல் ஜாபர்அலி ஆஜரானார்.