விளாத்திகுளத்தில் தேசியவாத காங்கிரஸ் தெருமுனை பிரசாரம்

விளாத்திகுளம், செப். 25: விளாத்திகுளத்தில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன்பு நடந்த தெருமுனை கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்து பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் சாம்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மாரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்களை ஆழப்படுத்துதல் என்ற பெயரில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், அரசுப் பணியாளர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தகுந்த மாற்றம் கொண்டு வர வேண்டும், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தமிழக அரசு உணர்ந்து சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் காகித வழியில் ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் டேவிட், கோவில்பட்டி வட்டாரத் தலைவர் காமராஜ், விளாத்திகுளம் வட்டாரத் தலைவர் நாராயணசாமி, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: