கொடைக்கானல்: கொடைக்கானலில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் கல்லறை மேடு பகுதி வருகை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில், சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் பல வருடங்களாகவே இந்த சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாமல் இருந்து வருகிறது.