சென்னை சங்கமத்தில் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்: கனிமொழி பேட்டி

சென்னை: சென்னை சங்கமம் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் என கனிமொழி பேட்டி அளித்துள்ளார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரின் 20 இடங்களில் நாளை முதல் 18ம் தேதி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சென்னை சங்கமத்தில் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என கனிமொழி பேட்டி அளித்துள்ளார். வடசென்னையில் ராயபுரம், கொளத்தூர், ஆவடி பகுதிகளில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என தெரிவித்தார்.

Related Stories: