மதுக்கரை: சேலம்-பாலக்காடு நான்கு வழிச்சாலையில் மாவுத்தம்பதி, பிச்சனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தினர் அனுமதியின்றி பாதை ஏற்படுத்தி இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பைபாஸ் ரோட்டில் மதுக்கரை மரப்பாலத்தில் இருந்து வாளையார் வரை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சி பகுதிகளில் பேக்கரி மற்றும் உணவகங்கள் நடத்தி வருபவர்கள் தங்களின் வசதிக்காக வியாபார நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் முறைப்படி அனுமதி வாங்காமல் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை மூடிவிட்டு ஆங்காங்கே சாலை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் மழை காலங்களில் மழைநீர் ரோட்டில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,