தருமபுரி: தருமபுரி மாவட்டம் அமனி மல்லபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவ மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.