ஏழாயிரம்பண்ணை: சாத்தூர் அருகே, பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (55). இவருக்கு சொந்தமான பார்சல் சர்வீஸ் அலுவலகம் பைபாஸ் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பார்சல்களை அடுக்கி வைத்திருந்தனர். அலுவலகத்தின் வெளிப்புறத்திலும் பார்சல்கள் வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென பார்சல்களில் தீ பற்றியது.