கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்தில் அம்பேத்கர், புத்தர், திருவள்ளுவர் சிலை திறப்புக்கு அனுமதி மறுப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்தில் தனியார் இடத்தில் அம்பேத்கர், புத்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைகளை திறக்க போலீஸ் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் அர்ஜுனன் என்பவரது இடத்தில் அம்பேத்கர், புத்தர், திருவள்ளுவர் சிலைகளை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. தகவல் கிடைத்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முறையாக அனுமதி பெறாமல் சிலைகள் திறக்க முடியாது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், உரிய அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று இரவு காவல்துறையினருடன் வந்த வருவாய் துறையினர், சிலைகளை துணியால் மூடி நடவடிக்கை எடுத்தனர். மேலும் சிறப்பு விழாவிற்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, சொந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி தேவையில்லை என அதிகாரிகள் வாய்மொழியாக கூறியதாக அர்ச்சுன‌ன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் உரிய அனுமதி பெற்று சிலைகள் திறக்கப்படும் என்று அர்ஜுனன் உறுதியளித்தார்.

Related Stories: