கும்பகோணம்: அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கெல்லாம் மூல காரணம் பாஜவேதான் என கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கும்பகோணத்திற்கு நேற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மாபெரும் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையோடும், கொள்கை உணர்வோடும் எந்த குழப்பமும் இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம்.