வடமதுரை: புத்தாண்டில் குற்றச் சம்பவங்கள் குறைய வேண்டி, வடமதுரை காவல்நிலையம் சார்பில் கோயிலில் கிடா வெட்டி போலீசார் வேண்டிக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையம் சார்பாக அய்யலூர் அருகே திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள வண்டி கருப்பண்ணசாமி கோயிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நேற்று நடத்தப்பட்டது. புது வருடத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க வேண்டியும், கொலை கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் குறைய வேண்டியும் கிடா வெட்டி விருந்து நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.