கன்னியாகுமரி: வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில்நகைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். கோயில் நகைகளுக்கு பிரசித்திபெற்ற ஊராக திகழ்கிறது நாகர்கோவிலில் உள்ள வடசேரி, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆர்டரின் பெயரில் கோயில் நகைகள் தயார் செய்து கொடுக்கப்படுகின்றன. ஏராளமான தொழிலாளர்கள் நகைசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கொரோனாவால் பலர் மாற்று தொழிலை நாடி சென்றுவிட்டனர்.