கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில், ஒரு சமுதாயத்தினருக்கு ஆதரவாக ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன மின் தகனமேடை அமைக்கும் பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள், இங்கு அமைக்கப்படும் நவீன மின் தகன மேடை அமைக்கும் பணிகளை நிறுத்திவிட்டு, அதை வேறிடத்தில் அமைக்க வேண்டும் என்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், செயல் அலுவலர் யமுனா ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர். எனினும், கிராம மக்களிடம் பேரூராட்சி நிர்வாகம் ஆலோசிக்காமல், நவீன மின் தகன மேடை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வந்துள்ளது.