கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை கும்பகோணத்தில் இருந்து ராமேஸ்வரம் - வாரணாசி விரைவு ரயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி: இந்தியாவில் இருந்து பல்வேறு ரயில்கள் மூலம் காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் செல்கிறார்கள்.