மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று காலை நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 15,200 கனஅடியாக இருந்த நிலையில் 2வது நாளாக இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.