கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நாமக்கல்: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: